புதிய நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை
திருச்சி, அக். 12 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ. லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் ரசியாராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வடிவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்,உதவி செயற்பொறியாளர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர் ,துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.