குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
திருச்சி, அக். 14 துறையூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நிகழ்வு நடைபெற்றது.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் காட்சியளித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்நேற்று முன்தினம் (அக்.12) சனிக்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் இருந்து சிலோன ஆபீஸ் பகுதி வரை ஊர்வலமாக சென்ற நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து சிலோன் ஆபீஸ் பகுதியில் அம்புவிடும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துறைவூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆரிய வைசிய பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.