சபரிமலையில் கூடுதல் வசதி : அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்பா சேவா சங்கம் கடிதம்
திருச்சி, அக். 16 திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியாருக்கு அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் தேசிய செயலாளர் M.தினேஷ் கடிதம்
சபரிமலையில் கூடுதல் அடிப்படை வசதிசெய்துதர கோரி கடிதத்தை 16/10/2024
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியாருக்கு அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் தேசிய செயலாளர் M.தினேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.
இக்கடிதத்தில்சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர்,உணவு,கழிவறை வசதி கூடுதலாக செய்து தர வேண்டும் . அதிக அளவில் மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும். பக்தர்கள் நலன் கருதிஅவர்களின் பாதுகாப்பை 100%உறுதி செய்ய வேண்டும்.
சபரிமலையில் செயல்படும் உணவுங்களில் விலை நியாயமாக இருப்பதும் உணவு தரமாக இருப்பதை 100% உறுதிப்படுத்த வேண்டும்
சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கூடுதலாக பேருந்து வசதியானது அதிக அளவில் செய்து தர வேண்டும். குறைந்த அளவில் பேருந்து கட்டணத்தை செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வலியுறுத்தியுகிறோம் என்று கூறியுள்ளார்