முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.2 இலட்சம் வழங்கல்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பில்
மாநில பொருளர் செ.நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார் மேலும் இந்த அமைப்பின் சார்பில் கொரோனா தொற்றால் திருச்சி மாவட்டத்தில் மறைந்த இந்த அமைப்பின் உறுப்பினர்களாகிய 5 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ரூ.25,000 வீதம் ரூ.1,25,000க்கான காசோலைகளை குடும்ப உறுப்பினர்களிடம் அமைச்சர்கள் வழங்கினர். உடன் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என்.சிவா,மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், அப்துல்சமது உள்ளிட்ட பலர் உள்ளனர்.