காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதிக்க கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்

0 687
Stalin trichy visit

திருச்சியை விட தொற்று அதிகம் உள்ள பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிஅளிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சில்லறைவியாபாரிகளை காந்தி மார்க்கெட்டில் வியாபரம் செய்ய அனுமதிக்க மறுக்கிறது – இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் பாலக்கரை அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது,இதில் சுமார் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் முழக்கம் இட்டனர்.
இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி முரளிதரன் : திருச்சியில் தற்போது நோய் தொற்று மிகவும் குறைந்துள்ள நிலையில் காந்தி மார்கெட்டில் சில்லறை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.பேருந்து போக்குவரத்து சேவை துவங்கியும் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி மறுப்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு காந்தி மார்க்கெட்டில் தங்குதடையின்றி வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.