போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
திருச்சி, பிப்.14 பள்ளிக்கல்வித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாரயம், போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றம் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி அரசு சையது முர்தூசா தகைசால் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. பேரணியை துணை ஆணையர் (கலால்) கோ.உதயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அ.மகேஸ்வரன், பள்ளித் தலைமையாசிரியை மெர்சிகிரைசி மற்றும் பள்ளி மாவணர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.