மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு

0 221
Stalin trichy visit

திருச்சி, பிப். 17  மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு -பேட்டி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில். திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடிப்படை வசதிகள் அனைத்தையும் தரமாக அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளோம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை ஒருபோதும் அகற்ற மாட்டோம். எப்போதும் போல் வழக்கமாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துவிட்டோம். ஆகையால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்க போவதில்லை. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.