துறையூர் பகுதியில் நாளை மின்தடை
திருச்சி, மார்ச் 15 திருச்சி மாவட்டம் துறையூர் 110/22-11 கி.வோ துணைமின் நிலையத்தில் 22 கி.வோ கொல்லப்பட்டி, 11கி.வோ முத்தயாம்பாளையம், 11கி.வோ நல்லவன்னிப்பட்டி, மற்றும் 11 கி. வோ CWSS உயரழுத்த மின்னூட்டியில் 16.03.2025 ஞாயிற்றுகிழமை அன்று உயரழுத்த மின்கோபுர மின்பாதை நிறுவும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாமநாயக்கன்பட்டி, மதுராபுரி, எரகுடி, வடக்குபட்டி, திருமனூர், சேனப்பநல்லூர், வெங்கடேசபுரம், விரமச்சான்பட்டி, சொக்கநாதபுரம், அய்யம்பாளையம், தேவரப்பம்பட்டி, கல்லுகுடி, கொத்தம்பட்டி, பெத்துபட்டி, கொல்லபட்டி, அம்மாபட்டி, சிங்களாந்தபுரம், நல்லவண்னிப்பட்டி, முத்தியாம்பாளையம், காளியாம்பட்டி, பகளவாடி, மேலகுன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, புதியவீட்டுவசதி வாரிய குடியிருப்பு (Housing Unit), புளியம்பட்டி, கலிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.