பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மகாமுனி கோவில் 1108 திருவிளக்கு பூஜை
திருச்சி, ஏப்.11 மணப்பாறை அருகே மகாமுனி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சின்னமணப்பட்டியில் உள்ள விநாயகர், முருகன் மற்றும் மகாமுனி கோவில்களில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற 1108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றினர். சிறப்பு வழிபாடுகளுக்கு பின் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.