திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம்
திருச்சி, ஏப்.11 திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா மற்றும் நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற் பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.