தா.பேட்டையில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஜூன் 3 திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
தா .பேட்டை சிவன் கோவில் முன்பாக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி ஆப்பிள் கணேசன்,மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய செயலாளர் கே கே ஆர் சேகரன்,நகர செயலாளர் தக்காளி தங்கராசு ஆகியோர் முன்னிலையில் தா.பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாகி பிரபு,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.