51 புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது
திருச்சி ஜூன் 27 திருச்சி கோட்டை சரக போலீசரகத்திற்குஉட்பட்ட இபி சாலையில் நேற்று கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில்
அவர் வரகனேரி முகம் தியா தெருவை சேர்ந்த முகமது தாவூத் இப்ராஹிம் ( வயது 34) என்பதும், அவர் ரூபாய் 97 ஆயிரம் மதிப்புள்ள 51.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.