திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, ஆக.18 திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிடுள்ள அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்ட கழக கூட்டம் வருகின்ற 19.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் என். கோவிந்தராஜ் தலைமையில், நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் (சிறப்பு அழைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.