வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
திருச்சி, ஆக.28 திருச்சி காஜாபேட்டை புனித மோட்சரக்கினி மாதா ஆலயத்தில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் வேளாங்கண்ணி செல்லும் சுமார் 3000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் படேல், ஆர் டி ஐ மாவட்ட தலைவர் கிளமெண்ட், ஆலய கமிட்டி தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சுந்தர், உதவி செயலாளர் சகாயம், நாதன், சதீஸ், சுஜித், ஆகாஷ் மற்றும் அன்னதான குழுவினர் கலந்துகொண்டனர்.