பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.வினர் மலர்தூவி மரியாதை
திருச்சி, செப்.25 மணப்பாறையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த திருவுருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த தினத்தை முன்னிட்டு மணப்பாறை பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
பொன்னுவேல், லலிதா அழகப்பன், தனலட்சுமி, மாலா நல்லுசாமி, செந்தில்குமார், சுரேஷ், குமார், ராஜா, ஜீவானந்தம், குழந்தைவேல், புல்லட் சின்னசாமி, லட்சுமணன், சதீஷ்குமார், உஷாலட்சுமணன், மணிவண்ணன் ஆகிய பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.