தமிழ்நாட்டில் கல்வித்துறை மிகவும் சீரழிந்து உள்ளது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

0 219
Stalin trichy visit

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நூறு நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று அவர் திருச்சியில் சருக்குபாறை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த பின் மேடையில் பேசிய அன்புமணி பேச்சு:

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை சீரழிந்து உள்ளது; ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் கோடி கல்வித்துறைக்கு ஒதுக்குவோம் என வாக்கு கொடுத்த திமுக அதனை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பலவிதமான போதை பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.. இதை தடுப்பதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… வெறும் அறிவிப்புகள் மட்டும் தான் இருக்கிறது..

தமிழ்நாட்டில் கல்வித்துறை சீரழிந்து விட்டது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று முதலமைச்சர் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.. ஆனால் அவர் சொல்வது போல தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கவில்லை. ஒரு மேடை போடுங்கள் விவாதத்திற்கு நான் வருகிறேன் புள்ளி  விவரங்களோடு வாதம் செய்ய நான் தயார்..

தமிழ்நாட்டில் கல்வித்துறை மிகவும் சீரழிந்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 4000 பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஒரே ஆசிரியர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே நேரத்தில் எப்படி பாடம் நடத்த முடியும்? தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கிடையாது. இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் படிக்க காரணம் என்ன? தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளை மாணவர்கள் அதிக அளவில் நாடிச் செல்ல காரணம் என்ன ? தரமான கல்வி அரசு பள்ளிகளில் கொடுத்தால் மாணவர்கள் ஏன் தனியார் கல்வியை நோக்கி செல்லப் போகிறார்கள்?

தமிழ்நாட்டில் இன்று 37,500 அரசு பள்ளிகள் உள்ளது அவற்றில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் 12,500 உள்ளது அவற்றில் 65 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். 1967-ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 99.9% மாணவர்கள் அரசு பள்ளியில் மட்டுமே படித்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறைக்கு மட்டும் 1 லட்சம் கோடி ஒதுக்குவோம் என சொன்னவர்கள் ஏன் செய்யவில்லை?

2021ல் அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது பிறகு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாங்கள் கல்வித் தொகையை 3 மடங்காக உயர்த்துவோம் என்று சொன்னார்கள் ஆனால் வெறும் 46 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள். நான் கரை ஆண்டு காலத்தில் வெறும் 12 கோடி மட்டுமே அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 40,000 காலியிடங்கள் இருக்க காரணம் என்ன?  தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை அறிவியல் கல்லூரியில் இன்றைக்கு முதல்வர்கள் இல்லை. முன்பெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள்  போட்டி போடுவார்கள் ஆனால் தற்போது அரசு கல்லூரிகளை மாணவர்கள் நாட மறுக்கிறார்கள். ஒரு லட்சத்து 36 ஆயிரம் காலியிடங்களில் வெறும் 96 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்து இருக்கிறார்கள் 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஏனென்றால் அரசு கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் இல்லை அதனால் மாணவர்கள் சேர தயங்குகிறார்கள். தமிழ்நாட்டின் பள்ளிகளைத் துறையும், உயர்கல்வித்துறையும் நிலை இப்படி இருக்க முதலமைச்சர் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

நீர் மேலாண்மை என்றால் என்னவென்று திமுக அரசுக்கு தெரியவில்லை. காவிரி குண்டாறு திட்டம், காவேரி அய்யாறு திட்டம், காவிரி மேட்டூர் உபரி நீர் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம், பாலாறு தென்பெண்ணை இணைப்பு திட்டம் அத்திக்கடவு அவிநாசி திட்டம், சோழர் பாசன திட்டம் இப்படி ஏகப்பட்ட திட்டங்கள் தமிழ்நாட்டில் செய்ய வேண்டியவை உள்ளது ஆனால் இது போன்ற எந்த திட்டத்தையும் நிறைவேற்ற திமுக அரசு தயாராக இல்லை.

 மண்,மலை, கிரானைட் ஆகியவற்றை கொள்ளையடித்தது போதாது என்று தற்போது கிட்னியை கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாமக்கல், திருச்செங்கோடு போன்ற பகுதியில் நெசவுத் தொழில் செய்பவர்கள் வறுமையை பயன்படுத்தி கிட்னியை திருடுகிறார்கள். திமுகவை சார்ந்தவர்கள் தான் கிட்னி திருட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டுபிடித்தார்கள் பிறகு உயர்நீதிமன்றம் இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தீர்ப்பு கொடுத்தது.. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறது.

இது ஒரு மானங்கெட்ட அரசு உண்மையில் யார் தவறு செய்திருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் திமுக அரசு குற்றம் செய்தவனை பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்கிறது.

திருச்சியில் அமைச்சர் நேருவை கிண்டல் செய்த அன்புமணி ராமதாஸ். அந்த காலத்தில் காந்தியும், நேருவும் சேர்ந்து நம்முடைய நாட்டிற்கு விடுதலை பெற்று கொடுத்தார்கள். அமைச்சர் நேரு தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை பெற காந்தி நோட்டுக்களை கொடுப்பார். அந்த காலத்தில் காந்தியும், நேரும் சேர்ந்து நம்முடைய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்தார்கள். அந்த காலத்தில் காந்திக்கும் நேருவுக்கும் சம்பந்தம் இருந்தது போலவே திருச்சியில் இருக்கும் அமைச்சர் நேருக்கும் காந்திக்கும் கூட சம்பந்தம் இருக்கிறது..

திருச்சி நேரு தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை பெற நிறைய காந்தி நோட்டுகளை கொடுப்பார். திருச்சி நேருவுக்கும் காந்திக்கும் அந்த ஒரு சம்பந்தம் மட்டுமே உள்ளது.

வருகின்ற தேர்தலில் திமுக ஆட்சியை விரட்டி அடிப்போம் அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மக்களுக்கு விரோதமான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த நான்கரை ஆண்டு காலமும் எந்தவிதமான திட்டத்தையும் செயல்படுத்த வில்லை..

நான் எப்போதும் உங்கள் உடன் இருப்பேன்… என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.