ஸ்ரீரங்கத்தில் கத்தியுடன் வாலிபர் கைது
திருச்சி அக்.2 திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ரேஷன் கடை அருகாமையில் 2 மர்ம வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இருந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் இரண்டு பேரையும் சுற்றி வளைத்தார் அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றார் மற்றொருவர் போலீஸ் பிடியில் சிக்கினார்
பின்னர் அவரை சோதனையிட்ட போது கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது பின்னர் அந்த நபரை கைது செய்தனர் கைதானவர் திருச்சி பெரிய மிளகு பாறை நாயக்கர் தெருவை சேர்ந்த ராம்குமார் 22 என்பது தெரியவந்தது தப்பி சென்றவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் ராஜ் ஆகும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.