பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம், தா .பேட்டை – பிள்ளாதுரையில் அருள்மிகு பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பாமா – ருக்மணியுடன் காட்சியளிக்கிறார்.கோவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.