பி.எஸ்.ஆர் அறக்கட்டளை சார்பில் சிறார் தீபாவளி கொண்டாட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு
திருச்சி, அக்.13 திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பிஎஸ்ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14ஆம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை கடந்த பத்து வருடங்களாக நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதுடன் ஆதாரவற்றோர், சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், குருதி கொடை வழங்குதல் உட்பட பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து நடத்திவருகின்றது. குறிப்பாக கடந்த 14 வருடங்களாக அரசு குழந்தைகள் காப்பகங்கள், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகங்கள், குடிசைவாழ் பகுதியை சேர்ந்த குழந்தைகள் என 15 குழந்தைகளில் ஆரம்பித்த சிறார் தீபாவளி பயணம் இந்தாண்டு 1300 குழந்தைகளுடன்கொண்டாடப்பட்டது.
ஒரு இடத்தில் அத்தனை குழந்தைகளையும் ஒன்றிணைத்து புது ஆடை, சிறப்பு பரிசு, உணவு என ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பரவ செய்வதே எங்களின் நோக்கம் என கூறும் பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, ஒவ்வொரு வருடத்திலும் தீபாவளி தேதிக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே இதற்கான பணிகளை ஆரம்பித்துவிடுவோம், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை தேடி தேடி வாங்குவதுடன், அவர்களுக்கான பரிசு, உணவுகளையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லாமல் செயல்படுபடுகிறோம் என்று கூறினார்.
இந்த ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாடட்டத்துடன் பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு துவக்கவிழாவும் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். கௌரவ விருந்தினராக எக்ஸல் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் Rtn AKS Er.முருகானந்தம் M அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திரு. பி.ராகுல்காந்தி அவர்களும், குழந்தைகள் நல குழுவின் தலைவர் பி.மோகன் , நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிஎஸ்ஆர் அறக்கட்டளயின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, நிதி அறங்காவலர்
Dr.டி. குணசீலன், செயலாளர் அறங்காவலர் மாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.