பாஜக அலுவலகத்தில் எஸ்ஐஆர் குறித்து ஆலோசனை கூட்டம்
திருச்சி,நவ.22 திருச்சி பாஜக அலுவலகத்தில் எஸ்ஐஆர் குறித்து ஆலோசனை கூட்டம்
SPECIAL INTENSIVE REVISION (SIR) சிறப்பு திருத்தம் குறித்த விளக்கக் கூட்டம் திருச்சிராப்பள்ளி பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் (MLA) , தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொது குழு உறுப்பினர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி வாக்களிக்கும் உரிமை உள்ளவர்களை எஸ் ஐ ஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் இணைப்பது போலி வாக்காளர்கள் இல்லாத நிலை உருவாக்குவது உள்ளிட்ட ஆலோசனையின் ஈடுபட்டு வருவதாக நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.