பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வையம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அமயபுரம் ஊராட்சி 6-வது வார்டு வேட்பாளர் செல்லமணிக்கு வாக்குகள் சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.