லால்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச.10 திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் லால்குடி நகர் மன்றத் தலைவர் துரை.மாணிக்கம், ஆணையர் புகேந்திரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.