மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில்மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி, ஜன.27 மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 50 வட்டக் கழக செயலாளர் ஞானசேகர் ஏற்பாட்டில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அமுமுக வட்டச் செயலாளர் பிரான்சிஸ் ராஜா, பாலக்கரை பகுதி பிரதிநிதி மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர் கவிதா மேரி, வட்ட அவைத்தலைவர் அழகு அய்யப்பன், பாலக்கரை இளைஞர் அணி பிரதிநிதி ஆரோக்கியராஜ், மற்றும் 10க்கு மேற்பட்டோர் இன்று தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதி செயலாளர் ராஜ் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.