முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி, பிப்.2 முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டிதியாகராஜன் மற்றும் மாணவர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.