தண்ணீர் என நினைத்து கெரசின் குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை!
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அடுத்த பஞ்சப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் கூலித்தொழிலாளி இவரது மகன் சின்னதம்பி (2). வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென சமையலறையில் இருந்த கிராசிங் பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து குடித்து விட்டது.

இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அந்த ஆபத்தான நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.