திருச்சியில் தமிழ்நாடு பார்க்கவ குல பேரவையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா
திருச்சி, ஜூன் 15 திருச்சி- தமிழ்நாடு பார்க்கவ குல பேரவையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா – சாதிவெறி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும் . நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாடு பார்க்கவகுல பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழா தனியார் அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு இதன் நிறுவனர் எல். ஆர். ரமேஷ் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசு உடனடியாக சாதிவெறி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் உறுதி செய்து நீட் உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிய ஆணவ படுகொலையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டின் இரண்டாவது தலை நகரமாக திருச்சியை மாற்ற வேண்டும் மேலும் தமிழகத்தின் உரிய காவிரி நீர் கிடைத்திட வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.