திருச்சியில் ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டல்
திருச்சி, செப்.14 திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார். அந்த பெண் திருமணத்திற்கு முன்பு கோயம்புத்தூரை சேர்ந்த விக்கி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விக்கி தனது மனைவியுடன் சேர்ந்து அந்த பெண்ணின் தாயிடம், நாங்கள் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை, அவரது மகளின் கணவரிடம் காட்டாமல் இருக்க ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.