ஸ்ரீரங்கத்திலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் கருப்பையா
திருச்சி, மார்ச் 28 திருச்சி நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் “ரங்கா ரங்கா” கோபுரம் முன்பு அரங்கநாதரை வணங்கி தனது பிரச்சாரத்தை துவக்கினார். முன்னதாக மகளிர் அணியினர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.