அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் : ஜாக்டோ – ஜியோ பங்கேற்பு
திருச்சி, ஜூலை 10 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் – ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர்
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுதும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எட்டாவது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.