டாஸ்மாக்கில் தகராறு : பீர் பாட்டிலில் குத்தியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதி

0 33
Stalin trichy visit

திருச்சி, ஆக.6  திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). சம்ப வத்தன்று இவர் தனது நண்பர் சிவாவுடன் (20) தென்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்தபோது, கார்த்திகேயன் மீது எதிரே வந்த உறையூரை சேர்ந்த செல்வகுமார் (50) மோதினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திகேயன், சிவாவை தாக்கி பீர்பாட்டிலால் குத்தினர். இதில் காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகி றார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக் குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.