மதக்கலவரத்தை தூண்டும் முயற்சி : பா.ஜ.க.வினர் மீது காவல்துறையில் புகார்
திருச்சி, டிச. 13 ஸ்ரீரங்கம் கோவிலில் கோவிலின் நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாக போராடுகிறேன் என மதக் கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டம் நடத்தி கோவிலில் தகாத முறையில் நடந்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.