வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு
திருச்சி, மார்ச் 28 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன்அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவஸ்ரி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உறுதிமொழி மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.