உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டம்
மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் கண்ணுடையான் பட்டி கிராம ஊராட்சி முத்தப்புடையான்பட்டியில் நவம்பர் 19 உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மைக்கான விழிப்புணர்வு ஓட்டம் (Swachhta Run) நடைபெற்றது. மணப்பாறை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி அமிர்தவள்ளி ராமசாமி தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி முருகன், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.