100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி
திருச்சி, மார்ச் 23 திருச்சி மாவட்டம். மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முகவனூர் ஊராட்சி பகுதி முகவனூர் கிராமத்தில் வையம்பட்டி ஒன்றியத்திலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பாக இன்று காலை 11 மணியளவில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில் வையம்பட்டி வட்டார இயக்க மேலாளர் இந்திராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் மொத்தம் 83 நபர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.