வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டு
திருச்சி, ஏப்.10 திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.