வேலம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி, ஆக.13 திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் வேலம்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து வருவாய் துறை சார்பில் இன்று வழங்கப்பட்ட மனுக்களுக்கு ஆறு பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வட்டாட்சியர் கண்ணாமணி ஆணையர் குணசேகரன் ஒன்றிய குழு தலைவர் சர்மிளா பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறையினரிடம் மனு அளித்தனர்