வேங்கை மண்டலத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி, ஆக. 17 திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வேங்கை மண்டலம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது, முகாமிற்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன் தலைமை வகித்தார் வட்டாட்சியர் கண்ணாமணி ஆணையர் அண்ணாதுரை துணை வட்டாட்சியர்கள் சரவணன் மற்றும் லதா முன்னிலை வகித்தனர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யப்பட்டு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மக்களால் நேரடியாக அனுப்பப்பட்டு அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு அதற்கு முப்பது நாட்கள் பதில் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது பொதுமக்கள் தங்கள் மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் நேரடியாக வழங்கினர் .பெரும்பான்மையான மனுக்கள் வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முகாமில் ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்