கல்லூரி மாணவி மாயம்!
திருச்சி ராம்ஜி நகர் மில்க் காலனி பகுதியை சேர்ந்த மோதிலால் என்பவரது மகள் சௌமியா (வயது 20). இவர் சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்ப டையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வரு கின்றனர்.