திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ராகவி(வயது 24). இவர் திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம்
தேதி கல்லூரி செல்வதாக கூறி சென்ற ராகவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. தோழிகள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மாணவியை தேடி வருகிறார்.