மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு!
திருச்சி மத்திய பஸ் நிலையம் தஞ்சை பஸ் நிற்கும் இடம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதையடுத்து கோ.அபி ஷேகபுரம் விஏஓ ஸ்டீபன் தன்ராஜ் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் எஸ்ஐ அகிலா வழக்குபதிந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றார்.