கிழக்குத் தொகுதியில் என்வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம்
திருச்சி, நவ.6 திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியில் கலைஞர் நகர் பகுதி, 63 வது வார்டு பாகம் எண் 233, பெருமாள்கோவில் தெரு, பாலக்கரை பகுதி 50 A, பாகம் எண் 150 காவிரி தியேட்டர் அருகில், அரியமங்கலம் பகுதி 31அ வார்டு பாகம் எண் 121 கல்பாளையம் மைதானம்,
மார்க்கெட் பகுதி வார்டு 20A, பாகம் எண் -109 மணிமண்டபம் சாலை, மலைக்கோட்டை பகுதி, வார்டு –12A, பாகம் எண் – 12 மேலச்சிந்தாமணி காவேரி நகர், மேற்குறிப்பிட்ட பகுதிகளில்
“என் வாக்குச்வாவடி வெற்றி வாக்குச்சாவடி” ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இப்பயிற்சிக் கூட்டத்தில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தொகுதி பார்வையாளர் கதிரவன், பகுதி கழகச் செயலாளர்கள் மணிவேல், ராஜ் முஹம்மது, மோகன், பாபு, விஜயகுமார் வார்டு செயலாளர்கள் கலியமூர்த்தி, ஞானசேகர், சாகுல், செந்தில் குமார், சுருளிராஜன், ஜெயச்சந்திரன், மற்றும் , உட்பட்ட கழக நிர்வாகிகள் பி.எல்.ஏ, பி.எல்.சி, பி டி ஏ, ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி உரையாற்றியபோது.
அரசினுடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நம் ஆட்சியின் பயன்களை பெற்ற பயனாளிகளை அடையாளம் காண வேண்டும் சரியான புதிய வாக்காளர்களை சேர்க்கவும் தவறுதலான போலியான வாக்காளர்களை நீக்கவும் துரிதமாக பணியாற்ற வேண்டும் இல்லங்கள் தோறும் அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் மாறும் கேட்டுக் கொண்டார்.
#SIR போன்ற ஜனநாயக விரோதப் போக்கை எதிர்கொள்ள கழகத்தின் BLA2, BLC மற்றும் BDA ஆகியோர் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்துரைத்தார்.