கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தன்னாட்சியில் 12 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் சேர்மன் பெரியசாமி தலைமை வகித்தார் .
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.
கொங்குநாடு கல்லூரியில் பயின்ற 535 மாணவ மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
கல்லூரியின் செயலாளர் தங்கவேலு, பொருளாளர்
தென்னரசு உள்ளிட்ட பலர் பட்டங்கள் பெற்ற மணவ,மாணவிகளை வாழ்த்து பேசினார். பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் அசோகன்,
துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.