திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி, ஆக.10 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று ( 10.08.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி. திவ்யா , துணை ஆணையர் அஜித்தா பர்வின், மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர் அண்ணாதுரை ,செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.