திருச்சி மாநகராட்சி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து மக்களுக்காக பல பணிகளை மேற்கொண்டுவருகிறார் அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படி இன்று பிளோமினால்புரம் முதல் தெரு, இரண்டாம் தெரு ஆகிய பகுதிகளில் அதிகாலை முதல் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கழக நிர்வாகிகளுடன் மேற்கொண்டார். கம்பன் தெருவில் 7மாதங்களாக தண்ணீர் வராமல் இருந்ததை சரி செய்து தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் .
