துரை வைகோவுக்கு CPI(ML)கட்சி வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப்.16 திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்
துரை வைகோ -வுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளில (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் சார்பாக மாவட்டகுழு உறுப்பினர் கே. மாசிலாமணி தலைமையில் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் S. ராஜ்குமார்,
நகர செயலாளர் பி.பாலு, மாவட்டகுழு உறுப்பினர்கள் கே.கருப்பையா, இளையராஜா, ராமாயி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.