தமுமுக- மமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமுமுக- மமக திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC தலைமையில் 29.09.2022 அன்று மாலை நடைப்பெற்றது.
அக்டோபர் 06 மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மதுரையில் UAPA சட்டத்திற்கு எதிராக நடைபெறும் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட மமக சார்பில் பெருந்திரளான மக்களை அழைத்து செல்வது என்றும்
அக்டோபர் 02 சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அணிவகுப்பில் திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக மமக சார்பில் பெருந்திரளான நிர்வாகிகள் கலந்து கொள்வது
அக்டோபர் 05 அன்று திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் இப்ராஹிம் ஹூமாயூன்கபீர் இப்ராஹிம் ஷா இம்ரான் அசாரூதீன் தென்னூர் சதாம் அப்பீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.