அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, மார்ச் 2 திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இளங்காகுறிச்சி ஆண்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பள்ளியின் உட்கட்டமைப்பு மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, வகுப்பறைக்குச் சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம கேட்டறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.