தார்ச்சாலை அமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, அக். 31 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி குமரேசபுரத்தில் ஒருங்கிணைந்த ஒதுக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.69.17 லட்சம் மதிப்பீட்டில் குமரேசபுரம் முதல் கூத்தைப்பார் ரோடு வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.