பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, அக். 31 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-3 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.