முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, ஜூலை 8 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி ஜூலை 9,10 வரை அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே இரண்டு நாள்கள் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சிவே.சரவணன் தெரிவித்துள்ளார்